டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும்.! முன்னாள் வீரர் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும்.! முன்னாள் வீரர் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?



senior-player-talk-about-t20-world-cup

இந்தியாவில் நடைபெற வேண்டிய டி20 உலகக்கோப்பை தொடர், கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு எஞ்சியுள்ள ஐபிஎல் தொடர் அங்கு முடிவடைந்தவுடன் டி20 உலகக்கோப்பை தொடரையும் அங்கேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம், இந்த டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணி குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், என்னை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் மேற்கிந்திய தீவு அணி தான் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவதாக இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது. 

cricketமேற்கிந்திய தீவு அணி இந்த தொடரை கைப்பற்ற வாய்ப்புக்கு காரணம் அந்த அணியில் அதிகமான அதிரடி வீரர்கள் உள்ளனர். ஒரு சில சிக்ஸ்கள் டி.20 போட்டிகளை அப்படியே மாற்றிவிடும். டி20 கிரிக்கெட்டில் மிக அனுபவம் வாய்ந்த அதிரடி வீரரான பொல்லார்ட் அந்த அணியை வழிநடத்துவது மற்றும் ஆன்ட்ரே ரசல், பிராவோ, கெயில் போன்ற மேட்ச் வின்னர்கள் பலர் அந்த அணியில் உள்ளனர்.

இந்திய அணியை பொறுத்தவரையில் அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் கலந்து அனைத்து வகையில் போதிய பலத்துடன் உள்ள அணியாக திகழ்கின்றனர். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடர்ந்து இந்திய அணிக்கும் இந்த டி20 தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறிய அவர் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறியுள்ளார்.