தோனியை இறக்காதது ஏன்? கொந்தளித்த கோலி.! ரவி சாஸ்திரி அளித்த தெளிவான விளக்கம்!! இதோ...
தோனியை இறக்காதது ஏன்? கொந்தளித்த கோலி.! ரவி சாஸ்திரி அளித்த தெளிவான விளக்கம்!! இதோ...
நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை இறுதி போட்டியில் ரசிகர்கள் யாரும் சிறிதும் எதிர்பாராத விதமாக இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தோனியை கடைசியாக ஏழாவது இடத்தில் களத்தில் இறங்கியது தான் காரணம் என சிலர் கருத்துக்களை முன்வைத்தனர்.
தோனியை இறுதியாக இறங்கியதற்கு இந்திய அணியின் கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் கடுமையாக, கோபமாக நடந்து கொண்டார்.
இந்நிலையில் இதுகுறித்து தற்பொழுது ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதில் நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் டோனியை முன்கூட்டியே இறக்கியிருக்க வேண்டுமென சிலர் கருதுகின்றனர். ஆனால் அவ்வாறு டோனியை முன்கூட்டியே இறக்கி, அவர் ஆட்டம் இழக்கும் நிலை ஏற்பட்டிருந்தால் நியூசிலாந்துக்கு எதிரான இலக்கை அடையும் முயற்சி கூட செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.
எப்பொழுதும் வெற்றிகரமாக எனது தனது ஆட்டத்தை முடிக்கும் திறமை வாய்ந்தவர் டோனி.அவரது அனுபவம் தற்பொழுது பின்வரிசையில் தேவை என்பதாலேயே அவரை ஏழாவது ஆட்டக்காரராக இறக்கினோம் என கூறியுள்ளார்.