மாநில அளவிலான கபடி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற புதுக்கோட்டை வீரர்கள்.! வீரர்களுக்கு ஆலங்குடியில் உற்சாக வரவேற்பு.!

மாநில அளவிலான கபடி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற புதுக்கோட்டை வீரர்கள்.! வீரர்களுக்கு ஆலங்குடியில் உற்சாக வரவேற்பு.!


pudukottai-youngsters-wonstate-level-kabadi

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் கபடி கழக சார்பில் சோனை மீனாள் கலைக்கல்லூரியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கபடி போட்டியை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா  பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதனையடு்த்து ஆலங்குடிக்கு திரும்பிய கபடி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Kabadi

இதில் மாவட்ட பொருளாளர் பழனிவேல், இணை செயலாளர் சிவக்குமார்,  துணைத் தலைவர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் ஆலங்குடி சந்தப்பேட்டை பிள்ளையார் கோவிலில் இருந்து மேளதாளங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக அழைத்து செல்லப்பட்டனர். அணைத்து வீரர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.