சி.எஸ்.கே அணிக்கு எம்.எஸ்.தோனி பயிற்சியாளராக முடியாது: கடிவாளம் போட்ட பி.சி.சி.ஐ..!

சி.எஸ்.கே அணிக்கு எம்.எஸ்.தோனி பயிற்சியாளராக முடியாது: கடிவாளம் போட்ட பி.சி.சி.ஐ..!


MS Dhoni cannot be a coach to CSK at south africa cricket league

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை போன்று தென் ஆப்பிரிக்காவில் டி-20  லீக் கிரிக்கெட் போட்டி தொடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ள இந்த போட்டி தொடரை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜோகனஸ்பர்க் நகரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கிடையே ஜோகனஸ்பர்க் அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனியை நியமிக்க அந்த அணி நிர்வாகம்  முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தோனி இந்தியா அல்லாத அணிகளுக்கு பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக செயல்பட பி.சி.சி.ஐ மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அந்த அணிக்கு தோனி பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ விரும்பினால், அதற்கு முன்னதாக  ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என பி.சி.சி.ஐ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறும் போது, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் வரை, உள்நாட்டு வீரர்கள் உட்பட எந்த இந்திய வீரரும் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க முடியாது என்பது தெளிவாகிறது.

அப்படி எந்த வீரராவது வரவிருக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்க விரும்பினால், அவர் பி.சி.சி.ஐயுடனான தொடர்புகளை துண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். முன்னதாக  இந்திய கிரிக்கெட் அணிக்காக தற்போது விளையாடும் வீரர்கள் வெளிநாட்டு டி-20 போட்டி தொடர்களில் பங்கேற்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.