மைதானத்தில் சீன் போட்ட இலங்கை வீரர்கள்! இறுதியில் நடந்த சோகமான சம்பவம்!

மைதானத்தில் சீன் போட்ட இலங்கை வீரர்கள்! இறுதியில் நடந்த சோகமான சம்பவம்!



Kusal Mendis falls off bike during Sri Lankas victory celebrations

கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி படுமோசமாக ஆடி முதல் சுற்றிலையே வெளியேறியது. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகள் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற்றதால் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது இலங்கை அணி.

இதில் தொடரை கைப்பற்றிய இலங்கை அணிக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் பரிசாக வழங்கப்பட பைக்கை எடுத்துக்கொண்டு இலங்கை வீரர்கள் சேஹன் ஜெயசூர்யா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் போட்டி நடைபெற்ற பிரேமதாசா  மைதானத்தை சுற்றி வந்தனர்.

cricket

அப்போது திடீரென நிலை தடுமாறி பைக்குடன் இரண்டு வீரர்களும் மைதானத்தில் சறுக்கி விழுந்தனர். உடனே மைதானத்தில் நின்றிருந்த ஊழியர்கள் ஓடிப்போய் இருவரைம் கை கொடுத்து தூக்கி விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.