இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்.! டாஸ் வென்ற விராட்கோலியின் அதிரடி முடிவு.!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்.! டாஸ் வென்ற விராட்கோலியின் அதிரடி முடிவு.!



India won the toss and bat first against England

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 5 முதல் 9-ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 

இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

second test

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்தநிலையில், இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுகிறது. 

இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரகானே, ரிஷப் பண்ட், அக்சர் படேல், அஷ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகம்மது சிராஜ்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

ரோரி பர்ன்ஸ், டொம்னிக் சிப்லே, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், பென் ஃபோக்ஸ் மோயின் அலி, பிராட், ஜாக் லீச், ஆலி ஸ்டோன்.