மீண்டும் இந்திய அணியில் இடம்பெற கங்குலி ஆவல்! ஆனால் இந்த முறை வேறுவிதமாக!

மீண்டும் இந்திய அணியில் இடம்பெற கங்குலி ஆவல்! ஆனால் இந்த முறை வேறுவிதமாக!



ganguly interest to be in indian team

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட தனக்கு விருப்பம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருந்து வரும் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்துவிட்டது. எனினும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Ganguli

அடுத்த பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கபில்தேவ் தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள சவுரவ் கங்குலி தனக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், "தற்போது நான் மேற்கு வங்க கிரிக்கெட் வாரிய தலைவர், டெல்லி அணியின் ஐபிஎல் ஆலோசகர், வர்ணனையாளர் என பல பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இந்த பணிகள் அனைத்தையும் ஒருநாள் ஒதுக்கி வைத்துவிட்டு இந்திய அணியின் பயிற்சியாளராக விண்ணப்பிப்பேன். இந்தமுறை தேர்வாவது கடினம்" என்று கூறியுள்ளார்.