இத யாரும் எதிர்பார்க்கல.... சௌமியா அன்புமணி பேச பேச முதலமைச்சர் விஜய் செய்த செயல்! சட்டப்பேரவையில் நடந்த செம சம்பவம்.!!!



vijay-trust-vote-pmk-sowmiya-anbumani-speech

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசுக்கு காங்கிரஸ், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

ஆளுநர் ஆட்சி அமையக் கூடாது என்பதற்காகவும், பாஜக தமிழகத்தில் மேலும் வலுப்பெறக் கூடாது என்பதற்காகவும் இந்த ஆதரவை வழங்குவதாக கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: திமுக வை கடுமையாக தண்டிக்கனும்! எந்த தொகுதியிலும் வெற்றி பெற கூடாது! இதுதான் எங்களது நோக்கம்! திமுகவுக்கு இந்த தேர்தல்ல பொங்கல் வைக்கணும்! ஹெச்.ராஜாவின் அதிரடி பேச்சு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக பங்கேற்கவில்லை

இதற்கிடையில், பாமக சார்பில் பேசிய எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக பங்கேற்காமல் விலகி இருப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில், அரசுக்கு பல முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

அதன்படி, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், முழுமையான மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

“ஒரு கடை மூடினால் மட்டும் போதாது”

மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும், கனிமவள கொள்ளைகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

மேலும் பேசிய அவர், முதல்வர் விஜய் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது நல்ல விஷயம் என்றாலும், ஒரு முக்கிய சிக்கலையும் சுட்டிக்காட்டினார். “மெயின் ரோட்டில் ஒரு கடை மூடப்பட்டால், சந்துகளுக்குள் 4 அல்லது 5 கடைகள் திறக்கப்படுகின்றன. இதை தடுக்க அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

விஜய் குறிப்பெடுத்த முக்கிய அம்சங்கள்

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் கவனமாகக் கேட்டு குறிப்பெடுத்து கொண்டார். குறிப்பாக, சௌமியா அன்புமணி முன்வைத்த மதுவிலக்கு மற்றும் சமூகநீதி தொடர்பான கருத்துகள் அவையில் கவனம் பெற்றன.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வரும் சூழலில், பல்வேறு கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: இரட்டை சவால்.... இடையில் சிக்கி தவிக்கும் விஜய்! ஸ்டாலின் திட்டம் போட்டு நகர்த்தும் காய்...5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் போராட்டம்!!!