சிக்கலில் சிக்கி தவிக்கும் சி.விஜயபாஸ்கர்...! தவெக-வில் இணைவதில் இருக்கும் பெரிய ட்விஸ்ட்... CM விஜய் எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவு! தவெக-வுக்குள் வெடித்த பயங்கர மோதல்.!!!
தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளாரா என்பது புதிய விவாதமாக மாறியுள்ளது. இது தொடர்பாக கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சிக்குள் இருவேறு கருத்துகள்
குட்கா ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சி.விஜயபாஸ்கரை கட்சியில் இணைத்தால், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு இடமளிக்கிறது என்ற விமர்சனம் எழலாம் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர். இதனால் பொதுமக்களிடையே எதிர்மறையான பிம்பம் உருவாகும் என்ற கவலையும் கட்சி நிர்வாகிகள் சிலரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் சி.விஜயபாஸ்கர்! அப்போ தவெக இல்லையா... இப்போ திமுகவா! அரசியலில் வெடிக்கப்போகும் பெரிய பூகம்பம்...!!!
மாவட்ட செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தல்
மறுபுறம், புதுக்கோட்டை மாவட்டத்தில் சி.விஜயபாஸ்கருக்கு உள்ள அரசியல் செல்வாக்கும் தனிப்பட்ட வாக்கு வங்கியும் தமிழக வெற்றிக் கழகம் வளர்ச்சிக்கு உதவும் என்பதால், அவரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி முடிவுக்காக காத்திருக்கும் அரசியல் வட்டாரம்
இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் அம்சங்களையும் ஆராய்ந்து கட்சித் தலைமை முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், சி.விஜயபாஸ்கரின் இணைப்பு குறித்து தமிழக வெற்றிக் கழகத் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: அதிர்ச்சியில் எடப்பாடி! MLA பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்..! அடுத்தக்கட்ட அரசியல் நகர்வால் பரபரப்பு..!!!