இன்று தமிழகத்தில் நடக்கபோகும் அடுத்த சம்பவம்! 10 மணிக்கு CM..... 10:30-க்கு அமைச்சர் காட்டப்போகும் அதிரடி அறிக்கையால் அதிரப்போகும் அரசியல் களம்.!!!
தமிழக மின்சார வாரியத்தின் செலவினங்கள் தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிகாரப்பூர்வமாக அறிக்கையை வெளியிட உள்ள நிலையில், முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நேரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியீட்டு நேரம் ஏன் மாற்றப்பட்டது?
முன்னதாக, இந்த வெள்ளை அறிக்கை காலை 10 மணிக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை தலைமைச் செயலகத்தில் அதே நேரத்தில் நடைபெறும் மற்றொரு முக்கிய அரசு நிகழ்ச்சியின் காரணமாக, அறிக்கை வெளியீடு அரை மணி நேரம் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, காலை 10:30 மணிக்கு வெளியிட அதிகாரப்பூர்வ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: BREAKING: முக்கிய அரசியல் மேடையில் வேட்பாளர் பட்டியல் மற்றும் விஜயின் தொகுதி அறிவிப்பு.....! அனல் பறக்கும் அரசியல் கலம்!
300 புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால், மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீட்டு நேரம் மாற்றப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
10:30 மணிக்கு அதிகாரப்பூர்வ வெளியீடு
இதையடுத்து, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று காலை 10:30 மணிக்கு தமிழக மின்சார வாரியத்தின் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். இந்த அறிக்கையில் வாரியத்தின் நிதிநிலை, செலவினங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கடந்த 5 வருஷம் என்னதான் நடந்துச்சு! சீக்ரட் ஆர்டர் கொடுத்த CM.... அடுத்த வாரம் வெளியாகும்..! மொத்தமாக அம்பலப்படுத்தப் போகும் அரசு..!!!