நடிகை அஞ்சலியா இது.? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!?
சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதானார் அதிமுக முன்னாள் கவுன்சிலர்!
சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதானார் அதிமுக முன்னாள் கவுன்சிலர்!
சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ என்ற இளம்பெண். அவர் கனடா செல்வதற்காக தேர்வுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது. பள்ளிக்கரணை பகுதியில் சாலையின் மீடியன் பகுதியில் வைக்கபட்டிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர் அவர் மீது விழுந்தது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் சுபஸ்ரீ உயிரிழந்தார். தங்களது ஒரே மகளை இழந்து சுபஸ்ரீயின் குடும்பத்தார்கள் கதறி துடித்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து, அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் நெஞ்சு வலி என்று கூறி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டவர் பின் தலைமறைவானார்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியது. அதனால் தனி படை அமைத்து இன்று கிருஷ்ணாகிரியில் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.