சீமானை பேரவைக்குள் கொண்டுவர திமுகவின் பலே திட்டம்? அம்பாசமுத்திரத்தில் ரகசிய டீல்.... அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்..!!!
தமிழக அரசியலில் இடைத்தேர்தலை மையமாகக் கொண்டு புதிய அரசியல் கணக்குகள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், பல்வேறு யூகங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
அம்பாசமுத்திரம் தொகுதியை குறிவைக்கும் நாம் தமிழர்?
அரசியல் வட்டார தகவல்களின்படி, தற்போதைய சூழலில் கட்சியை மேலும் வலுப்படுத்த ஒரு தேர்தல் வெற்றி அவசியம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, வரவிருக்கும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இடைத்தேர்தல்களைத் தவிர்த்து, அம்பாசமுத்திரம் தொகுதியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற விருப்பம் கட்சிக்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கவே இல்லையே! நயினார் நாகேந்திரனுக்கு புதிய பதவி...! தமிழக பாஜகவில் அடுத்த அதிரடி மாற்றம்..!!!
ரகசிய ஆலோசனைகள் நடைபெறுவதாக தகவல்
மேலும், இதுதொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூலமாக சில ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனினும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள் எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
புதிய அரசியல் கணக்குகளா?
தமிழக வெற்றிக் கழகம் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அதன் அரசியல் சவால்களை சட்டமன்றத்திற்குள்ளேயே எதிர்கொள்ளும் வகையில் சீமானை பேரவைக்குள் கொண்டு வருவதில் திமுகவும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல்கள் அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களே தவிர, எந்தக் கட்சியும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதனால், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலைச் சுற்றியுள்ள அரசியல் நகர்வுகள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து வரும் ஆஃபர்.! பாஜகவும் களத்தில் இறங்கிட்டு... மாநிலம் தலைவர் பதவியா? திமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!!