மு. க. ஸ்டாலின்-க்கு நன்றி தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்!!!

மு. க. ஸ்டாலின்-க்கு நன்றி தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்!!!



mkstalin

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

 மழை வெள்ளத்தால் தவித்த கேரள மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து உதவி கரங்கள் நீட்டப்பட்டது. இதனையடுத்து திமுக கட்சி MLA, MP-கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தனர்.

பினராயி விஜயன்

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நன்றி கடிதம் எழுதியுள்ளார்!

பினராயி விஜயன்

இக்கடிதத்தில் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 1 கோடியை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தீர்கள். அத்துடன் அத்தியாவசிய பொருட்களையும் அனுப்பி வைத்தீர்கள், உங்களுக்கு கேரள மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பினராயி விஜயன்