நாம் யாரும் பொழுதுபோக்கிற்காக அரசியலுக்கு வரல... போராட வந்தவங்க...! திமுக செயற்குழுவில் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம் கலந்த உணர்ச்சி பேச்சு...!!!



mk-stalin-dmk-restructuring-youth-women-trust

திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கால அரசியல் பயணத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் கட்சியின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்சியை மறுசீரமைத்து, புதிய முகங்களுக்கு அதிக பொறுப்புகளை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மீண்டும் அரசியல் வெற்றியைப் பெற அமைப்பு ரீதியான மாற்றங்கள் அவசியம் என்றும் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.

புதுமுகங்களுக்கு அதிக பொறுப்புகள்

கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிலைகளில் புதுமுகங்களுக்கு அதிக எண்ணிக்கையில் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார். குறிப்பாக, இளம் தலைமுறையினரை கட்சிப் பணிகளில் அதிகளவில் ஈடுபடுத்துவதன் மூலம் எதிர்கால அரசியல் தேவைகளுக்கு ஏற்ப இயக்கத்தை தயார்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அடுத்த ஆப்பு ஆரம்பம்... திமுகவை அதிரவைத்த அந்த ஒரு போன் கால்..! கெத்தாக வேலையை காட்டும் தவெக...!! ஆடிப்போன அறிவாலயம்!!!

ஒவ்வொரு தொண்டனும் நிர்வாகியாக செயல்பட வேண்டும்

திமுகவின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட சில தனிநபர்களை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், ஒவ்வொரு தொண்டனின் உழைப்பும் அதற்கு அடிப்படை என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு தொண்டரும் ஒரு நிர்வாகியைப் போல பொறுப்புடன் செயல்பட்டால்தான் இயக்கம் தொடர்ந்து வலுப்பெறும் என்றார்.

ஒரு மாவட்டச் செயலாளரை மட்டும் நம்பி, ஒட்டுமொத்த மாவட்டத்திலும் கட்சியை வளர்த்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்கு அனைத்து நிர்வாகிகளும் இணைந்து செயல்படும் கூட்டுப் பொறுப்பு அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

‘பொழுதுபோக்கிற்காக அரசியலுக்கு வரவில்லை’

கட்சியினரின் அர்ப்பணிப்பு உணர்வை நினைவுகூர்ந்த ஸ்டாலின், அரசியலுக்கு வந்ததன் நோக்கத்தையும் எடுத்துரைத்தார். “நாம் யாரும் பொழுதுபோக்கிற்காகவோ, ‘Bore அடிக்கிறது’ என்பதற்காகவோ அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை; போராட வந்தவர்கள்” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.

கட்சியின் அமைப்பை அடித்தளத்தில் இருந்து வலுப்படுத்தி, புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து, ஒவ்வொரு தொண்டரையும் செயல்பாட்டின் மையமாக மாற்ற வேண்டும் என்பதே அவரது உரையின் முக்கிய நோக்கமாக அமைந்தது. இதனால் திமுக மறுசீரமைப்பு நடவடிக்கைகள், வரவிருக்கும் அரசியல் மற்றும் தேர்தல் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: தோல்விக்கான அதிர்ச்சி காரணம்... ஆகஸ்ட் 22 திமுக கூட்டத்தில் வெளிவரப்போகும் உண்மை! அதிரடி ஆலோசனையில் அறிவாலயம்.....!!!