#Breaking: டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு.. மக்களுக்கு தித்திப்பு செய்தி.!

டங்க்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர், அரிட்டாபட்டி பகுதியில் அமைக்கப்படவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்தனர். நேற்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அழைத்துக்கொண்டு டெல்லி சென்று கனிமவல்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேசி இருந்தார்.
இந்நிலையில், மதுரை அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் உறுதி செய்துள்ளார்.கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மத்திய கனிமவல்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மக்களிடத்தில் பிரிவினையை தூண்டும் இராமநாதபுரம் எம்.பி.. எல்.முருகன் கண்டனம்.. காரணம் என்ன?
இதையும் படிங்க: மக்களிடத்தில் பிரிவினையை தூண்டும் இராமநாதபுரம் எம்.பி.. எல்.முருகன் கண்டனம்.. காரணம் என்ன?