சகோதரர்களுடன் பேசி முடிவெடுப்போம் - மேகதாது விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் உறுதி.!

சகோதரர்களுடன் பேசி முடிவெடுப்போம் - மேகதாது விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் உறுதி.!



Karnataka Deputy CM Sivakumar 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாத பகுதியில், காவேரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அணை கட்டுவதில் முந்தைய பாஜக அரசு போல காங்கிரஸ் அரசும் உறுதியாக இருக்கிறது. 

karnataka

இந்த விஷயத்திற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கர்நாடக முதல்வர் துணை முதல்வர் சிவகுமார் பேசுகையில், "தமிழர்களுடன் எந்த விஷயத்திலும் எங்களுக்கு சண்டையிட விருப்பம் இல்லை. 

தமிழகம் எங்களது சகோதரத்துவ மாநிலம். தமிழர்கள் இங்கு வேலை பார்க்கிறார்கள், கன்னடர்கள் அங்கு வேலை பார்த்து வருகிறார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனை தீர்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.