இந்த ஆறு அறிகுறிகள் வந்தால் உங்களுக்கு அந்த நோயாக இருக்கலாம்! அலட்சியம் வேண்டாம்!

இந்த ஆறு அறிகுறிகள் வந்தால் உங்களுக்கு அந்த நோயாக இருக்கலாம்! அலட்சியம் வேண்டாம்!



sugar-disease-symptoms-in-tamil

முன்பெல்லாம் ஒருசிலருக்கு மட்டுமே வந்த சர்க்கரை வியாதி இன்று நம்மில் பலருக்கும் வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாததுதான். பொதுவாக நமது உடல் இன்சுலினை உற்பத்தி செய்யும். அவ்வாறு உற்பத்தியாகும் இன்சுலின் அதிக அளவு பயன்படாமல் போகும் நேரத்தில் அது நமது இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால்தான் சர்க்கரை வியாதி வருகிறது.

சர்க்கரை வியாதி வருவதற்கு முன்பு ஒரு சில அறிகுறிகளை கொண்டு நாம் அதை கண்டறியலாம். அவை என்னனு பார்க்கலாம் வாங்க.

1. கண் பார்வையில் குறைபாடு:
ஒருவரின் உடலில் இருந்து அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும்.

2. அடிக்கடி சிறுநீர் கழித்தல்:
சர்க்கரை நோயின் போது நமது உடலில் இருந்து அதிகப்படியான திரவங்கள் வெளியேற்றப்படும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும். இது சர்க்கரை நோய்க்கான முக்கிய அறிகுறி.

Diabetes

3. திடீர் உடல் எடை குறைவு:
சர்க்கரை நோய் வந்துவிட்டால் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காது. இதனால் கொழுப்பு நிறைந்த செல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்து ஆற்றல் பிரித்து எடுக்கப்படும். இதனால் உடல் எடை குறையும்.

4. அடிக்கடி உடற்சோர்வு:

சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து அதற்கு தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால் அவர்களுக்கு அடிக்கடி உடற்சோர்வு, அசதி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

5. புண்கள் சீக்கிரமாக குணமடையாது:
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் நமது உடலில் என்னும் காயங்கள் ஏற்பட்டால் அது குணமாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.

Diabetes

6. ஈறுகளில் வீக்கம்:

சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.