பாம்பு புற்றில் பால் ஊற்றியது இதற்காகத்தான்... உண்மை இப்படியிருக்க நிலைமை?..!

பாம்பு புற்றில் பால் ஊற்றியது இதற்காகத்தான்... உண்மை இப்படியிருக்க நிலைமை?..!



snake-milk-drinking

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான புற்று கோவில்களில் பாம்புகளுக்கு பால் மற்றும் முட்டை போன்றவை பக்தர்களால் வைக்கப்படும். ஆனால், தமிழகத்தில் உள்ள மக்கள் அதனை பாரம்பரியமாக கடைபிடித்து வருவது பின்னாட்களில் பெரும் சர்ச்சையை தந்தது.

வழிவழியாக வந்தோர் உண்மைகளை வெளிப்படையாக சொல்ல மறந்ததன் விளைவாக, என்ன காரணத்திற்காக அதனை செய்கிறோம் என்ற விபரம் கூட தெரியாமல் அவற்றை கடைபிடிக்கிறோம்.

அன்றைய நாட்களில் குடிசை வீடுகளில் பெரும்பாலும் வாழ்ந்தோம். பாம்புகள் அதிகம் தென்பட்ட நாட்களில், அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டி பால் மற்றும் முட்டைகள் வைக்கப்பட்டன. பால் மற்றும் முட்டை பாம்புகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும். இதனாலேயே புற்று அருகே அவை வைக்கப்பட்டது, ஊற்றப்பட்டது.