விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு வருகிறதா? எப்படி பாம்பு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கான விளக்கம் இதோ....

பொதுவாக கனவுகள் இயற்கையானவை. ஆனால் கனவு சாஸ்திரம் எனப்படும் தொன்ம நம்பிக்கையின் படி, சில கனவுகள் நம்முடைய வாழ்க்கை, நிகழப்போகும் சம்பவங்கள் மற்றும் நம்மில் உள்ள மனச்சிக்கல்களுடன் தொடர்புடையவை எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், பாம்பு குறித்த கனவுகள் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தக்கூடியவை. இருப்பினும், இதற்கும் பலவிதமான அர்த்தங்கள் உள்ளன.
பாம்பு கனவுகளின் பலன்கள்:
பாம்பு வீட்டுக்குள் வந்து வெளியே போவதுபோல் கனவு:
நீண்ட காலமாக குலதெய்வ வழிபாடு செய்யாமை, நேர்த்திகடனை நிறைவேற்றாமை போன்ற காரணங்களால் இக்கனவு வரும். இது, குலதெய்வ வழிபாட்டை நினைவூட்டுகிறது.
பாம்பு தலைக்கு மேல் குடை பிடிப்பது அல்லது நம்ம்மீது ஏறுவது போல கனவு:
நற்பலன் தரக்கூடிய கனவு. அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
பாம்பு வீட்டில் இருந்து வெளியேறுவது போல கனவு:
சோதனைகள் விலகும், மனநிம்மதி அதிகரிக்கும். சந்தோஷமான காலம் தொடங்கும்.
வீட்டுக்குள் நுழைந்த பாம்பை அடிப்பது போல கனவு:
உங்கள் சுற்றத்தில் உள்ள நபர்களின் உண்மை முகங்களை அறிய வாய்ப்பு. யார் நல்லவர், யார் கெட்டவர் என புரிந்துகொள்ள உதவும்.
இதையும் படிங்க: கோடை வெயிலிலும் துளசி செடி செழிப்பாக வளரணுமா? கற்றாழை ஜெல்லுடன் இந்த பொருட்களை சேர்த்து பாருங்க செடி முழுக்க இலை தான்....
பாம்பு யாரையாவது கடிப்பது போல கனவு:
நீங்கள் நம்பும் நபரால் ஏமாற்றப்படலாம். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நல்ல பாம்பு வீட்டுக்குள் வருவது போல கனவு:
குடும்பத்தில் நன்மைகள், மகிழ்ச்சி நடக்கும்.
நல்ல பாம்பு வீட்டில் சுற்றுவது போல கனவு:
உடல்நலக் கவலைகள் ஏற்பட வாய்ப்பு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நல்ல பாம்பு வீட்டில் மறைந்து இருப்பது போல கனவு:
குடும்பத்தில் உள்ளவர்களால் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம்.
பாம்பு கனவுகள் பயமுறுத்தினாலும், அவை எப்போதும் கெட்டதையே நமக்குச் சொல்கின்றன என்பதில்லை. அந்த கனவில் பாம்பு எப்படி வருகிறது, என்ன செய்கிறது என்பதன் அடிப்படையில் அதன் அர்த்தமும் பலனும் மாறுபடும். எனவே, கனவுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
இதையும் படிங்க: மத்தி மீன் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புதங்களை பாருங்க ! பார்த்து பயன்பெறுங்கள்......