அடக்கொடுமையே! பேஸ்புக்கில் வீடியோ பார்த்து ஜுஸ் போட்டு குடித்தது ஒரு தப்பா! அடுத்த நொடியே நிகழ்ந்த சோகம்!

அடக்கொடுமையே! பேஸ்புக்கில் வீடியோ பார்த்து ஜுஸ் போட்டு குடித்தது ஒரு தப்பா! அடுத்த நொடியே நிகழ்ந்த சோகம்!



juice

இலங்கையில் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் பேஸ்புக் வீடியோவில் ஜூஸ் போடுவதை பார்த்து அப்படியே ஜூஸ் போட்டு குடித்த நபர் அடுத்த நொடியே உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது குறித்த நபர் மனைவியுடன் சண்டையிட்டு தனிமையில் வசித்து வந்துள்ளார். அதனால் அவர் தான் அனைத்து வேலைகளையும் தனியாக செய்து வந்துள்ளார். ஒரு நாள் அதேபோல் பேஸ்புக்கை பார்த்த போது அதில் கஜ மாடரா என்ற மரத்தின் இலையை வைத்து ஜூஸ் போட்டு குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Juice

அதன்படி அவர் கஜ மாடராத்தின் இலையை வைத்து ஜூஸ் போட்டு குடித்துள்ளார். ஆனால் அவர் குடித்த அடுத்த நொடியே மயக்கமாகி உள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீண்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.