காதலிக்கும்போது உறவு கொண்டால் தவறில்லை என எண்ணுபவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இத படிங்க
காதலிக்கும்போது உறவு கொண்டால் தவறில்லை என எண்ணுபவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இத படிங்க

காதல் என்பது எந்த வயதிலும் வர கூடியது. காதலிக்கும் எல்லோருக்கும் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் காம உணர்வு உண்டாகும். அந்த காம உணர்வை கட்டுப்படுத்தி காதலில் எப்படி கடைசி வரை மகிழ்ச்சியாய் இருக்கிறோம் என்பது தான் முக்கியம்.
பொதுவாக காதலர்கள் தனிமையில் இருக்கும் பொது அவர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அப்படி கட்டுப்படுத்த முடியாமல் ஏற்படும் உடலுறவுகளினால் என்னவெல்லாம் பாதிப்புகள் உண்டாகும் என்பதை தான் இங்கே பார்க்க போகிறோம்.
திருமணமான தம்பதிகள் உடலுறவு கொள்வது என்பது அவசியமான ஒன்று தான். மேலும் இது கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ஆனால் காதல் செய்யும் காலத்தில் காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது அவசியம் என்கின்றனர் காதல் பற்றிய ஆய்வாளர்கள்.
காதலிக்கும் போது உடல் உறவு கொண்ட பின், அட இவ்வளவுதானா? என்ற ஒரு மண நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி ஒன்றும் பாதிப்புகள் வராது என்று நினைத்து திருமணத்திற்கு முன் உறவில் ஈடுபடுபவர்கள் மேற்கொண்டு படித்து முடிவு செய்யுங்கள்.
காதல் என்பது உணவின் மனத்தை மட்டும் கண்டு ரசிப்பது. ஆனால் காமம் என்பது அந்த உணவை அனுபவித்து உண்பது என்கின்றனர் காதல் ஆய்வாளர்கள்.
ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களின் செக்ஸ் ஆர்வத்தை விட மிகவும் வித்தியாசமானது. ஒரு பெண்ணிடம் உறவு கொண்ட பின் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் சுகம் கிடைக்குமா என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.
இப்படி மனம் அலைபாய்வதால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
காதலர்கள் முதல் முறை தவறு செய்வதற்கு மட்டும் தான் அஞ்சுவர். ஒருமுறை தவறு செய்துவிட்டால் அதுவே ஒரு தைரியத்தை ஏற்படுத்தி பின்னர் அடிக்கடி தவறு செய்யத் தூண்டும்.
அடுத்தமுறை உறவுக்கு சம்மதிக்காவிட்டால், காதலில் நம்பிக்கை இல்லையா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழ ஆரம்பித்துவிடும். இதனால் காதலில் மரியாதையும், அன்பும் காணாமல் போய்விடும்.
காதலர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வருவது இயல்பானதுதான் அப்படிப்பட்ட நேரத்தில் உறவுக்கு சம்மதித்தது பற்றி கேவலமாக பேசப்பட்டுவிட்டால் காதல் முறிந்துபோய்விடும். பெண் யார் கேட்டாலும் உறவுக்க சம்மதிப்பவராக இருப்பார் என்ற எண்ணம் ஆணுக்கு வந்துவிடும்.
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம். ஒருவேளை காதலரை கைப்பிடிக்க முடியாமல் போய்விட்டால், வேறொருவரை திருமணம் செய்ய நேரும் பட்சத்தில் அந்த குற்ற உணர்வு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.
திருமணத்திற்கு முன் உறவில் ஈடுபட்டவர்கள் ஏதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும். காதலர்கள் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும். ஆண், பெண் இருவரிடமும் ஒரு அவநம்பிக்கை வந்துவிடும். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். தேவையில்லாமல் அவசரப்பட்டுவிட்டோமே என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.
திருமணம் முடித்த பின்னர் அவர்களுக்குள் புதிதாக ஒன்றுமில்லை என்பதால், வாழ்க்கையில் இருக்கும் சுவாரஸ்யம் குறைந்து விடும். உடலுறவு செய்யும் எண்ணம் குறைந்து விடும்.
திருமணத்திற்கு பின் பெண்களுக்கு காமத்தின் மீது ஆர்வம் அதிகமாக துவங்கும், ஆனால் ஆண்கள் அதை விட்டு நழுவி வரவே முயற்சிப்பர்.
காதலிக்கும் போது காமத்தின் மீது ஆசை வைத்து உறவில் ஈடுபட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது பெரும் ஆர்வமும் இருக்காது. எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் அறிவுறுத்தலாகும்.
உறவு முழுமையானதாக இல்லாத பட்சத்தில் இருவருக்கும் பிறர் மீது சந்தேகம் வந்துவிடும். செக்ஸ் திருப்தி தர முடியாத இவருடன் எப்படி வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும்.