43 வயதிலும் என்ன ஒரு அழகு.. கவனத்தை ஈர்த்த திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்.!
Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதியதால் கோர விபத்து! மாணவர்களின் நிலை என்ன? கடலூரில் பரபரப்பு.....
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு துயரமான விபத்து நிகழ்ந்துள்ளது. தனியார் பள்ளியை சேர்ந்த ஒரு வேன் மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, சிதம்பரம் நோக்கி வந்த ரயில் ஒன்று வேகமாக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன்
பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயற்சித்த வேளையில், அதே நேரத்தில் ரயில் வந்ததால் மோதி விபத்துக்குள்ளானது. வேன் முழுவதுமாக நொறுங்கி சேதமடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாணவர்கள் உயிரிழப்பு மற்றும் படுகாயம்
இந்த பயங்கர ரயில் விபத்தில், வேனில் பயணித்த மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் விரைந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! அறிவிப்பு வெளியிட்ட ஆட்சியர்....
முதலில் இருவரின் உயிரிழப்பு மட்டுமே உறுதியாக இருந்த நிலையில், பின்னர் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இது சோகத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டின் உள்ளே கதவை பூட்டி மாட்டிகொண்ட குழந்தை! கேஸ் அடுப்பில் குக்கர், கொதிக்கும் வெந்நீர்! 1 மணி நேரமாக தவித்த தாய்! திக் திக் நிமிடம்...