திருமண ஊர்வலத்தில் வெடிகுண்டு தாக்குதல்.! பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்.!

திருமண ஊர்வலத்தில் வெடிகுண்டு தாக்குதல்.! பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்.!



young man died bomb blast

கேரள மாநிலம் கண்ணூரில் திருமண ஊர்வலத்தின்போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேரளா மாநிலம் கண்ணூரில் திருமண விழாவையொட்டி கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருமணசடங்கு முடிந்து நேற்று புதுமணத் தம்பதிகளின் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஜிஷ்ணு என்பவரின் குழுவினர் ஊர்வலத்தில் வெடிகுண்டு வீசியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஜிஷ்ணுவின் தலையில் வெடிகுண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக  4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் ஜிஷ்ணுவின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.