ஓடும் பேருந்தில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்கள்.! அதிர வைக்கும் பின்னணி.!



young girl abused in bus

பீகார் மாநிலத்தில் ஓடும் பேருந்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள மோதிஹரி பேருந்து நிறுத்தத்தில் 17 வயது சிறுமி நின்றிருந்தார். அந்த சிறுமி மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டயாஹ் பேருந்திற்காக காத்துக்கொண்டு இருந்தார். அந்த வழியாக வந்த பேருந்து ஒன்று  பெட்டயாஹ் செல்வதாக கூறியதால் சிறுமி அந்த பேருந்தில் ஏறிக்கொண்டார்.

பேருந்தில் வேறு யாரும் இல்லாத நிலையில் அதில் இருந்தவர்கள் சிறுமிக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர். இதனை வாங்கி குடித்தவுடன் சிறுமி சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் கண்விழித்து பார்த்தபோது பேருந்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் தான் இருக்கும் நிலைமையை பார்த்து பேரதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஓட்டுநரும், அவனது உதவியாளரும் தனக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர், உதவியாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.