"ஐயோ என் காது.." சண்டையில் பக்கத்து வீட்டுக்காரரின் காதை கடித்துக் குதறிய பெண்.!

"ஐயோ என் காது.." சண்டையில் பக்கத்து வீட்டுக்காரரின் காதை கடித்துக் குதறிய பெண்.!



woman-bites-the-ear-of-her-neighbour-during-a-fight-ove

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரின் காதை கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

upஉத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ராம்வீர் பாகேல். இவரது அண்டை வீட்டில் ராக்கி என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் கேட்டை மூட மறந்தது தொடர்பாக ராக்கி மற்றும் ராம்வீர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

up
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் ராக்கி, ராம்வீரின் காதை கடித்து துண்டித்ததாக தெரிகிறது.இந்த சம்பவத்தில் வலியால் அலறி துடித்த ராம்வீர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராக்கியை காவல் துறை விசாரித்ததில் ராம்வீரின் காதை கடித்து விழுங்கியதாக அவர் தெரிவித்து இருக்கிறார். இதனையடுத்து ராக்கியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.