தோழியுடன் உல்லாசமாக இருந்த தாய்; லெஸ்பியன் உறவை கண்ட மகன் கொடூர கொலை.!

தோழியுடன் உல்லாசமாக இருந்த தாய்; லெஸ்பியன் உறவை கண்ட மகன் கொடூர கொலை.!



West Bengal MOther Killed Son While He Know MOther Lesbian Activity 

 

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஹூக்ளி பகுதியை சேர்ந்த பெண்மணி சாந்தா ஷர்மா. இவரின் தோழி இஷ்ரத் பர்வீன். இவர்கள் இருவரும் நீண்டகால தோழிகள் ஆவார்கள். 

சாந்தா சர்மாவுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், தோழிகளிடையே தன்பாலினசேர்கை உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் பல நேரங்களில் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

தங்களின் உறவு குறித்து யாருக்கும் சந்தேகம் வராத வண்ணமும் பார்த்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு லெஸ்பியன் ஜோடி தனிமையில் வீட்டிற்குள் உல்லாசமாக இருந்துள்ளது. 

இதனை சாந்தா சர்மாவின் 10 வயது மகன் பார்த்துள்ளார். இதனால் சிறுவன் தங்களின் ரகசிய உறவை அம்பலப்படுத்துவிடுவாரோ என அச்சப்பட்ட ஜோடி, சிறுவனை அடித்தே கொலை செய்துள்ளது. 

அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். சிறுவனின் கொலை குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

குற்றச்செயலில் ஈடுபட்ட லெஸ்பியன் ஜோடியும் கைது செய்யப்பட்டனர்.