குழந்தை பிறந்த பிறகு மனைவிக்கு கணவன் சொன்ன அந்த ஒரு அதிர்ச்சி உண்மை! தெரிந்ததும் மனைவி எடுத்த விசித்திர முடிவு.... இப்படி ஒரு பெண்ணா? அவரே இத எதிர்பார்த்திருக்க மாட்டாரு.!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு Viral Video, திருமணம், குடும்ப உறவு மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு பெண் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உரை வடிவில் பகிர்ந்துள்ளார். இருப்பினும், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
திருமணத்திற்குப் பிறகு வெளிப்பட்ட உண்மை
அந்த பதிவின்படி, அலுவலகத்தில் சக ஊழியர்களாக அறிமுகமான இருவரும் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில், பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தத்தில் இருந்த காலத்தில் தனது கணவர், தான் ஓரினச்சேர்க்கையாளர் என்பதைக் கூறியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
குழந்தைக்காக எடுத்த முடிவு
இதையடுத்து தம்பதியராக இணைந்து வாழாமல் இருந்தாலும், குழந்தையை சேர்ந்து வளர்க்க முடிவு செய்ததாக அவர் கூறியுள்ளார். அதன்படி, ஒரே வீட்டில் தனித்தனி பகுதிகளில் வசித்து வருவதாகவும், அவர் தனது மகனுடன் மேல்தளத்திலும், முன்னாள் கணவர் தனது ஆண் துணையுடன் கீழ்தளத்திலும் வசித்து வருவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினை
இந்த தகவல் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர், குழந்தையின் நலனை முன்னிறுத்தி அமைதியான சூழலை உருவாக்கியதாக அந்த பெண்ணை பாராட்டியுள்ளனர். மற்றொரு தரப்பினர், சமூக வலைதளம் முழுவதும் இந்த விவகாரம் குறித்து கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். அதே நேரத்தில், இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Woman finds out that her husband is gay after they had a son, and she allows his husband to live with his gay partner in the same house. I sincerely believe women are stronger than men. pic.twitter.com/QOsHvbGzqn
— Lord Immy Kant (@KantInEastt) June 30, 2026
இதையும் படிங்க: முதலிரவு அறையில் மணமகள் ஆடைகளை களைந்தபோது மாப்பிள்ளை கண்ட அதிர்ச்சி! என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுத கொடூரம்..!!!