பலாத்கார முயற்சி தோல்வி: 6 வயது சிறுமி கொலை., 50 வயது கயவன் கைது.!

பலாத்கார முயற்சி தோல்வி: 6 வயது சிறுமி கொலை., 50 வயது கயவன் கைது.!



Uttarpradesh 6 years old girl rape and murder

 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியில் 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்த ராஜ்பீர் என்ற 50 வயது நபர் சிறுமியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

பயந்துபோன சிறுமி அலறவே, கயவன் சிறுமியின் கழுத்தை நெரித்ததாக தெரியவருகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே சிறுமி மயங்கி உயிரிழந்த நிலையில், உடலை நீரில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல வந்துள்ளான். 

UttarPradesh

இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகவே, அதிகாரிகள் கயவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.