விபத்தில் உயிரிழந்த மனைவி; நெஞ்சம் பொறுக்காது தற்கொலை செய்து உயிரை மாய்த்த கணவர்.. மணமான 6 மாதத்தில் சோகம்.!

விபத்தில் உயிரிழந்த மனைவி; நெஞ்சம் பொறுக்காது தற்கொலை செய்து உயிரை மாய்த்த கணவர்.. மணமான 6 மாதத்தில் சோகம்.!



Uttar Pradesh Harodi Husband Dies by Suicide After Wife Died on Accident 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹரோடி மாவட்டத்தை சேர்ந்தவர் யோகேஷ் குமார் (வயது 36). இவரின் மனைவி மணிகர்ணிகா குமாரி (வயது 28). தம்பதிகளுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது 

புதுமணத்தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். யோகேஷ் குமார் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று குமாரி லக்னோ - ஹரோடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தை இயக்கியபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக குமாரியின் அடையாள அட்டையை வைத்து காவல் துறையினர் யோகேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு பதறியபடி விரைந்த குமார், தனது மனைவியின் மரணத்தை உறுதி செய்துள்ளார். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

பின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்ற யோகேஷ், பக்கத்து வீட்டாரிடம் சோகமாக இத்தகவலை தெரிவித்து இருக்கிறார். வீட்டிற்குள் சென்றவர் மீண்டும் வரவில்லை. பக்கத்து வீட்டில் இருப்பவர் சந்தேகித்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, யோகேஷ் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கில் தொங்கியது உறுதியானது. 

இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் யோகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.