பீட்சா கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்து அதிர்ச்சி செயல்; வாடிக்கையாளர்கள், பணியாளர்களிடம் பணம், நகை கொள்ளை.!

பீட்சா கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்து அதிர்ச்சி செயல்; வாடிக்கையாளர்கள், பணியாளர்களிடம் பணம், நகை கொள்ளை.!



Uttar Pradesh Ghaziabad Robbery Attempt 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜியாபாத் பகுதியில், தனியாருக்கு சொந்தமான பீட்ஸா கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. 

நேற்று இரவு 7 மணியளவில் வாடிக்கையாளர்கள் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். ஊழியர்கள் வழக்கமாக தங்களின் பணிகளை கவனித்து வந்தனர். 

அச்சமயம் அங்கு முகமூடி அணிந்த நபர்கள் உணவகத்திற்குள் துப்பாக்கி முனையில் நுழைந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டனர். 

கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் உணவக பணியாளர்களிடம் துப்பாக்கி முனையில் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து கொள்ளைக்கும்பல் தப்பிச்சென்றது. 

இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.