ஏண்டி மூணும் பொட்டப்பிள்ளையா பெத்த?.. கட்டிபிரண்டு சண்டையிட்ட மாமியார்-மருமகள்.. நடந்த பரபரப்பு சம்பவம்.!

ஏண்டி மூணும் பொட்டப்பிள்ளையா பெத்த?.. கட்டிபிரண்டு சண்டையிட்ட மாமியார்-மருமகள்.. நடந்த பரபரப்பு சம்பவம்.!



Uttar Pradesh Aligarh Daughter In Law Mother In Law Fight 

 

பெண்களை தெய்வமாக பேசும் இந்திய திருநாட்டில், ஏன் பெண் குழந்தையாக பெற்றுள்ளாய் என எவ்வித அறிவுமின்றி மருமகளை கேள்வி கேட்டு தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க் மாவட்டம், டோரி நகர், காந்திபார்க் தெருவில் வசித்து வரும் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 

அடுத்தடுத்த 3 பிரசவத்தில் மருமகள் பெண் குழந்தைகளை ஈன்றெடுத்ததால், ஆத்திரமடைந்த மாமியார், எதற்காக உனக்கு பெண் குழந்தையாக பிறக்கிறது என வாக்குவாதம் செய்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிய, இருவரும் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. 

இந்த விஷயம் குறித்து தற்போது வரை காவல் நிலையத்தில் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை.