அடுத்தவனுடன் அந்த கோலத்தில் மனைவியை கண்ட கணவன்! அடுத்து வலையில் சிக்கிய மகளும்....இறுதியில் 2 பேரும் திட்டம் போட்டு தீர்த்துகட்டிய கொடுமை...!!!
உத்தரப் பிரதேசத்தில் குடும்ப உறவுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நடந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை திட்டமிட்டு கொலை செய்ததாக மனைவி, அவரது மகள் மற்றும் ஒரே நபருடன் தொடர்பில் இருந்த கள்ளக்காதலன் ஆகிய மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் கொள்ளை நாடகமாக காட்டப்பட்ட இந்த வழக்கு, போலீஸ் விசாரணையில் வேறு திருப்பத்தை எடுத்தது.
குடும்பத்தில் தொடங்கிய சந்தேகம்
தகவலின்படி, சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனது மனைவிக்கும் மற்றொரு நபருக்கும் இடையே இருந்த தொடர்பை சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் குடும்பத்தை கருத்தில் கொண்டு மனைவியை திருத்த முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குப் பிறகும் அந்த தொடர்பு தொடர்ந்து வந்துள்ளது.
இதற்கிடையில், அந்த நபருடன் மகளுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் குடும்பத்திற்குள் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதாக கூறப்படுகிறது.
மொட்டைமாடியில் பேசிய கொடூர திட்டம்
ஒருநாள் வீட்டின் மொட்டைமாடியில் மகளும் அந்த நபரும் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த தாய் தனது கணவரை வழியிலிருந்து அகற்ற வேண்டும் என கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்பின், மூவரும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ய முடிவு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இரவு நேரத்தில் வீட்டிலேயே அந்த நபர் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டுள்ளார். பின்னர் சம்பவத்தை கொள்ளை முயற்சி போல மாற்ற முயற்சி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
செல்போன் விவரத்தில் சிக்கிய உண்மை
மறுநாள் காலை, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து கணவரைக் கொன்றுவிட்டதாக தாய் மற்றும் மகள் கதறி அழுதுள்ளனர். ஆனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கு அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
அதன்பின் போலீசார் செல்போன் அழைப்பு விவரங்கள், Tower Location உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்தனர். விசாரணையில் மூவரின் திட்டமிட்ட நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, தாய், மகள் மற்றும் அவர்களது கள்ளக்காதலன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஒரு நொடி ஆத்திரத்தில் நொறுங்கிய குடும்பம்! தந்தையே எமனாக மாறிய அவலம்.....இறுதியில் நடந்த அதிர்ச்சி!!!