மகளின் காதலன் சரமாரியாக சுட்டுக்கொலை; நள்ளிரவு சந்திப்பால் நேர்ந்த விபரீதம்.. பெண்ணின் தந்தை பகீர் செயல்.!

மகளின் காதலன் சரமாரியாக சுட்டுக்கொலை; நள்ளிரவு சந்திப்பால் நேர்ந்த விபரீதம்.. பெண்ணின் தந்தை பகீர் செயல்.!



UP Ghaziabad Father Kills Daughter Love Boy

 

தனது எச்சரிக்கையையும் மீறி மகளுடன் காதலை தொடர்ந்த பிடெக் கல்லூரி மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத், க்ராஸ் ரிபப்ளிக் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ் குமார் சிங். இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். தற்போது தனது மனைவி, மகளுடன் மேற்கூறிய அடுக்குமாடி குடியிருப்பில் 13வது மாடியில் வசித்து வருகிறார். 

முன்னாள் பிஎஸ்எப் அதிகாரியின் மகள், பொறியியல் கல்லூரி மாணவரான விபுல் (வயது 25) என்பவரை காதலித்து வந்தாக தெரியவருகிறது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் தொடர்பாக பெண்ணின் தந்தைக்கும் தெரியவந்துள்ளது. இதனால் தந்தை தனது மகளை கண்டித்து இருக்கிறார். 

எனினும், காதல் ஜோடி தங்களின் காதலில் உறுதியாக இருக்கவே, பெற்றோருக்கு தெரியாமல் பெண்மணி தனது காதலரை சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் காதல் ஜோடி நேரில் சந்தித்துள்ளது. பெண் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரியவருகிறது. 

Ghaziabad

இதனை அறிந்த ராஜேஷ் குமார் சிங் தனது மகள் மற்றும் அவரின் காதலரை கண்டித்து இருக்கிறார். அப்போது இருதரப்பு வாக்குவாதம் உண்டாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிங், தனது மகளின் காதலியை கைத்துப்பாக்கியால் 5 முறை சுட்டுக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் விபுல் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து நிகழ்விடம் விரைந்த காவல்துறையினர், விபுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ராஜேஷ் குமார் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.