கோவிலில் திருட வந்த திருடன் செய்த செயல்... வைரலாகும் சிசிடிவி காட்சி...

கோவிலில் திருட வந்த திருடன் செய்த செயல்... வைரலாகும் சிசிடிவி காட்சி...



Theif reaction in kovil

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அம்மன் கோவிலில் திருடன் ஒருவன் விசித்திரமான முறையில் திருடிய சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக திருட வந்த இடத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்து திருடுவதையே நோக்கமாக கொண்டு திருடி செல்லும் திருடர்களை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு நபர் அம்மன் கோவிலுக்கு திருட சென்று விட்டு செய்த செயல் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது கோவிலில் திருடுவதற்கு முன்பாக அங்கு இருந்த அம்மன் சிலையை முதலில் கையெடுத்து விட்டு நன்கொடை பொட்டியை திருடி செல்கிறார். இக்காட்சி அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுமட்டுமின்றி, கோவிலின் 2 பெரிய மணிகள் மற்றும் கோயில் சொத்துகள், அம்மனுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட சில விலையுயர்ந்த பொருள்களையும் திருடன் திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.