சி.எஸ்.கே தோற்றாலும் இவங்க பேமஸ் ஆயிட்டாங்க!! வைரலாகும் நடிகையின் கியூட் ரியாக்சன்..
கொடுமையின் உச்சகட்டம்... 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு... கோவில் பணியாளர்கள் 2 பேர் கைது.!
கொடுமையின் உச்சகட்டம்... 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு... கோவில் பணியாளர்கள் 2 பேர் கைது.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தின் சாட்னாவிலிருந்து 45 கி.மீ. தொலைவில் மெய்ஹாா் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றில் பணியாளர்களாக இருந்து வருபவர்கள் ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் பதோலியா. இவர்கள் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள 12 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் கோவில் பணியாளர்களான ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் பதோலியா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரின் செயலால் கோவிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.