அம்மா தானே திட்டுனாங்க அதுக்கு போய் இப்படியா பன்றது.. செல்போனில் நேரத்தை செலவிட்ட சிறுமி.. தாய் கண்டித்ததால் சிறுமி எடுத்த விபரீத முடிவு..!

அம்மா தானே திட்டுனாங்க அதுக்கு போய் இப்படியா பன்றது.. செல்போனில் நேரத்தை செலவிட்ட சிறுமி.. தாய் கண்டித்ததால் சிறுமி எடுத்த விபரீத முடிவு..!



The mother scolded her and it turned out like this.. The girl spent time on her cell phone.. The girl took a terrible decision because her mother scolded her..!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் வசித்து வருபவர் 15 வயது சிறுமியான ஹேமா லோகண்டே. இவர் செல்போனில் அதிக நேரத்தை  செலவிடுவதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று உணவு சாப்பிடும் போது ஹேமா செல்போனை பார்த்தவாறு இருந்துள்ளார். இதனால ஆத்திரமடைந்த அவரது தாய் ஹேமாவை கடுமையாக திட்டியுள்ளார். இதனையடுத்து தனது தாய் திட்டியதால் ஹேமா செல்போனை எடுத்துக் கொண்டு கோபித்தவாறு மூன்றாவது மாடிக்கு சென்றுள்ளார்.

young girl

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஹேமா கீழே இறங்கி வராததால் அவரது பெற்றோர் மேலே சென்று பார்த்துள்ளனர் அப்போது ஹேமா தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அலறி கூச்சலிட்டு உள்ளனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக போலிசார்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.