கொடூரத்தின் உச்சம்.. தனது தங்கைகளை அடித்தே கொலை செய்த அக்கா.. வெளியான பரபரப்பு தகவல்..!



The height of cruelty.. Sister who killed her younger sisters.. Exciting information released..!

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகில் உள்ள பகதூர்பூர் கிராமத்தை சேர்ந்த ஷில்பி, ரோஷினி ஆகிய இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணையில் இந்த இரண்டு சிறுமிகளுக்கு அஞ்சலி என்ற ஒரு அக்கா உள்ளார். இவர் தனது காதலனுடன் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை இந்த இரண்டு சிறுமிகளும் பார்த்துள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த அஞ்சலி தனது காதலனுடன் சேர்ந்து கூட பிறந்த தங்கைகள் என்றும் பாராமல் அடித்து கொலை செய்துள்ளார்.

UttarPradesh

இதனையடுத்து அஞ்சலி மற்றும் அவரது காதலரான அமானை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தன் கூட பிறந்த தங்கைகளை அக்கா அடித்தே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.