திருமண மண்டபத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மணப்பெண்!.. மணமகன் கைது...!!

திருமண மண்டபத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மணப்பெண்!.. மணமகன் கைது...!!



The bride committed suicide by hanging herself in the wedding hall

தெலுங்கானா மாநிலம் நவிபேட்டையில் வசித்து வந்தவர் ரவளி (22). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் பெற்றோர்களால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் மெகந்தி விழாவில் மணமகளின் தோழிகளுடன் இவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக நடமாடியுள்ளனர். மேலும் மணமக்கள் இருவரும், சந்தோஷமாக இருந்துள்ளனர். மறுநாள் காலை மணப்பெண் அலங்காரம் செய்வதற்காக மணப்பெண் அறை கதவை தட்டியுள்ளனர்.

வெகு நேரம் கதவு திறக்காத நிலையில் பயந்துபோன உறவினர்கள், கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர். அங்கே ரவளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், ரவளி இரவு நீண்ட நேரம் மாப்பிள்ளையிடம் போனில் பேசியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், சந்தோஷ் ரவியிடம் வரதட்சணை கேட்டுள்ளார். மேலும் வேலைக்கு சென்று சம்பாதித்து வந்த ரவளி திருமணத்திற்கு பிறகும் நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் திருமணம் முடிந்தவுடன் பெற்றோரிடம் இருந்து சொத்துக்களை பிரித்துவாங்கி வர வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரும் வந்த நிலையில், திருமணம் நின்று விட்டால், அவமானம் ஏற்படும் என்று நினைத்த ரவளி மணமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிந்தது. இதை தொடர்ந்து மணமகன் சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.