தீவிரவாதிகள் சொன்ன அந்த வார்த்தை.! கண்முன்னே கணவனை இழந்த மனைவி.! கண்ணீருடன் கதறல்.!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய சுற்றுலாத்தளமான பஹல்கம் பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் திடீரென பயங்கரவாதிகள் சிலர் நுழைந்து அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாக்குதலில் பலியான மஞ்சுநாத் ராவ்
மேலும் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் ராவ் என்பவரும் பலியாகியுள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான மஞ்சுநாத் ராவ் அவரது மனைவி பல்லவி மற்றும் மகனுடன் நான்கு நாள் சுற்றுலாவாக காஷ்மீருக்கு சென்றுள்ளார். இவர்கள் பஹல்கம், சுற்றுலா தளத்திற்கு சென்றபோது இந்த பயங்கரம் நேர்ந்து மஞ்சுநாத் ராவ் பலியாகியுள்ளார்.
இதையும் படிங்க: திருமணமாகி 7 நாளிலேயே... தேனிலவு சென்ற இடத்தில் மனைவி கண்முன்னே நேர்ந்த பயங்கரம்.!
செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேட்டி
இந்தத் தாக்குதலில் கண்முன்னே கணவரை இழந்து, அங்கிருந்து உயிர்தப்பிய பல்லவி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நான், எனது கணவர் மற்றும் எனது மகன் மூவரும் இங்கு சுற்றுலாவுக்கு வந்தோம். இன்று (22.04.25) மதியம் 1.30 மணியளவில் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதிகள் எனது கணவரை தாக்கினர். என் கண்முன்னே அவர் துடித்து இறந்தார்.
மோடியிடம் போய் சொல்
நான் அவர்களிடம் தன்னையும், தனது மகனையும் சுட்டுக் கொன்றுவிடுமாறு கூறினேன். அதற்கு பயங்கரவாதிகளில் ஒருவர், நாங்கள் உன்னை கொல்ல மாட்டேன். இங்கு நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடம் போய் சொல்" என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் மக்கள்தான் தங்களுக்கு உதவியதாகவும் அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம்? வெளியான அதிர்ச்சி தகவல்.!