திருமணமாகி 7 நாளிலேயே... தேனிலவு சென்ற இடத்தில் மனைவி கண்முன்னே நேர்ந்த பயங்கரம்.!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் திருமணமாகி 7வது நாளிலேயே தேனிலவு சென்ற இந்திய கடற்படை அதிகாரியான வினய் நர்வால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதல்
ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் சுற்றுலாத் தலத்துக்குள் அண்மையில் திடீரென பயங்கரவாதிகள் சிலர் நுழைந்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பயங்கர தாக்குதலில் 27 பேர் பலியானர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம்? வெளியான அதிர்ச்சி தகவல்.!
பலியான கடற்படை அதிகாரி
இந்த துப்பாக்கி தாக்குதலில், இந்திய கடற்படை அதிகாரியான வினய் நர்வால் என்பவர் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 26 வயது நிறைந்த இவருக்கு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 19 ஆம் தேதி திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது.
தேனிலவு சென்ற இடத்தில் கொடூரம்
அதனைத் தொடர்ந்து அவர் தனது மனைவியுடன் ஜம்மு காஷ்மீருக்கு தேனிலவுக்கு வருகை தந்துள்ளார். அங்கு திருமணமாகி 7வது நாளிலேயே பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கி தாக்குதலில் வினய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கணவனின் உடல் முன்னே மனைவி அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி நெஞ்சை உலுக்குகிறது.
இதையும் படிங்க: "அவன்கிட்ட எத கண்ட..." காதலிக்க மறுத்த பெண்.!! சுட்டு கொன்ற காதலன்.!!