ஆந்திராவில் பயங்கரம்.. ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பலியான சம்பவம்..!

ஆந்திராவில் பயங்கரம்.. ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பலியான சம்பவம்..!



terrible-accident-in-andhra-bus-collided-with-auto-4-pe

ஆந்திர மாநிலம் கடப்பா ஆசாத் நகர் காலனியில் வசிப்பவர்கள் 11 பேர் புரோட்டூரிலிருந்து ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஆட்டோவானது எர்ராகுண்டலா பகுதி அருகே லாரியை கடக்க முயற்சித்த போது எதிரே வந்த பேருந்தின் மீது அதிபயங்கரமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த முகமது, ஜாகீர், ஹசீனா மற்றும் ஆமினா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Road accident

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.