கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
ஆள் மாறாட்டம் செய்த பள்ளி ஆசிரியர்.. பெற்றோர்கள் முற்றுகை போராட்டம்.!

கர்நாடகா மாநிலம் உள்ள தாவணகெரே மாவட்டத்தில் உள்ள மாதேனஹள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பிரகாஷ் என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இவர் இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக வேலை செய்து வரும் நிலையில், வாரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தனது மனைவியை தனக்கு பதிலாக மாணவர்களுக்கு பாட ம் நடத்த அனுப்பியுள்ளார்.
இவரின் இந்த நடவடிக்கை கண்டித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கு விரைந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.