அதிர்ச்சி.. போலீஸ் உயர் அதிகாரியின் மகன் ஸ்கேட்டிங் செய்து போது கார் மோதி பலி..!



Shocking.. The son of a top police officer was killed by a car while skating..!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஏ.எஸ்.பி ஆக பணிபுரிந்து வருபவர் ஸ்வேதா சீனிவஸ்த்தவா. இவருக்கு 10 வயதில் நமீஷ் குமார் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் லக்னோவில் உள்ள ஜனேஸ்வர் மிஸ்ரா பூங்காவில் ஸ்கேட்டிங் செய்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்று சிறுவன் மீது அதிவேகமாக மோதி உள்ளது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

accident

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கார் ஓட்டுநரை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் ஸ்கேட்டிங் செய்த போது போலீஸ் உயர் அதிகாரியின் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.