பல ஆண்டு உழைப்புக்கு நொடியில் கிடைத்த ஏமாற்றம்! 70 ஆயிரம் கடன் வாங்கி படிக்க வச்சேனே...நீட் தேர்வு எழுத முடியாமல் கேட் வாசலில் கதறிய மாணவி! மயங்கி விழுந்த ஏழை தந்தை.! இதயம் நொறுங்கும் காட்சி...!!!



re-neet-student-denied-entry-vidisha

மத்தியப் பிரதேசத்தின் விடிஷா பகுதியில் நடைபெற்ற ரீ-நீட் தேர்வில், சில நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவி தேர்வு எழுத முடியாமல் போன சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகள் உழைத்த மாணவி ராகினி, தேர்வு மைய வாசலிலேயே ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடன் வாங்கி மகளின் படிப்புக்காக போராடிய தந்தை

விடிஷா மாவட்டத்தின் குல்ஹான் கிராமத்தைச் சேர்ந்த ராகினி, re-NEET தேர்வை எழுத அரசு மகளிர் கல்லூரி தேர்வு மையத்திற்கு சென்றிருந்தார். தினக்கூலி தொழிலாளியான அவரது தந்தை உமேஷ் விஸ்வகர்மா, மகளின் படிப்புக்காக 70 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி லேப்டாப் மற்றும் ஸ்கூட்டர் வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது. மருத்துவராகும் இலக்குடன் ராகினி தினமும் நீண்ட நேரம் படித்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நடுரோட்டில் பொண்டாட்டி அடிச்சா தப்பு இல்ல.... ஆனால் புருஷன் அடுச்சா தப்பா? அடி தாங்க முடியாமல் கதறி அழுத கணவன்! அதிர்ச்சி வீடியோ..!!!

மழை, டயர் பஞ்சர்... தாமதமான வருகை

தகவலின்படி, தேர்வு நடைபெறும் நாளில் பெய்த மழையால் பயணம் சிரமமானது. அதோடு ஸ்கூட்டரின் டயர் பஞ்சரானதால் ராகினி தேர்வு மையத்தை சில நிமிடங்கள் தாமதமாக அடைந்தார். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு கேட் மூடப்பட்டிருந்ததால், அவரும் அவரது தந்தையும் அதிகாரிகளிடம் அனுமதி கோரி முறையிட்டனர்.

நிலைமை மேலும் பதற்றமான நிலையில், மகளின் எதிர்காலம் குறித்து கவலையடைந்த உமேஷ் விஸ்வகர்மா தேர்வு மைய வாசலிலேயே மயங்கி விழுந்தார். அப்போது அவர் கதறி அழுத காட்சிகள் அங்கிருந்தவர்களை கலங்கச் செய்ததாக கூறப்படுகிறது.

பயோமெட்ரிக் போர்ட்டல் மூடப்பட்டதால் வாய்ப்பு பறிப்பு

பின்னர் அதிகாரிகள் ராகினியை உள்ளே அழைத்துச் சென்றனர். ஆனால் மதியம் 1.40 மணியுடன் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கான ஆன்லைன் செயல்முறை நிறைவடைந்ததால், அவரால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. இதனால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்பு அவரிடமிருந்து நழுவிச் சென்றது.

இதய நோயால் யாரும் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்கக் கூடாது என்பதற்காகவே கார்டியாலஜிஸ்ட் ஆக வேண்டும் என்ற கனவை தன்னுள் வளர்த்ததாக ராகினி கண்ணீருடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, தேர்வு நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

இதையும் படிங்க: ஐயா... ப்ளீஸ் விடுங்க! இந்த நொடிக்காக தான் இவ்வளவு கஷ்டம்! மகளின் நீட் தேர்வு கனவுக்காக காவலர்களின் காலில் விழுந்து கதறிய அழுத தாய்.! நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!