அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு அறிவித்து மபி அரசு அதிரடி நடவடிக்கை!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு அறிவித்து மபி அரசு அதிரடி நடவடிக்கை!


public exam to government school teacher

மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததால் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு அறிவித்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 15 ஆம் தேதி வெளியானது. இதில் 700 அரசு பள்ளிகளில் 30% சதவிகிதத்திற்கும் மேலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்

school teachers

இந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் கடந்த கல்வியாண்டை விட 5 சதவிகிதம் சரிந்துள்ளது. இது அந்த மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை மற்றும் அரசினை மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு அரசு பள்ளி ஆசிரியர்களின் திறன் குறைவு தான் காரணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அந்த 700 அரசு பள்ளிகளில் பணிபுரியும் 3500 ஆசிரியர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்த மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேர்வானது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை போன்றே இருக்குமாம். 

school teachers

வரும் ஜூன் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த தேர்வில் ஆசிரியர்கள் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றால் அவர்களது தகுதியை குறைப்பதுடன் மிகக் குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்களை விருப்ப ஓய்வு கொடுத்து வேலையை விட்டு நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.