கர்ப்பிணியின் பெண்ணுறுப்பில் 27 செமீ இரும்பு ராடு.. சைக்கோ கணவனால் ராட்சசன் பட பாணியில் நரகவேதனை.. பறிபோன 2 உயிர்.!



Pregnant Woman Brutally Murdered by Husband in Chhattisgarh; Shocking Torture Case Sparks Out

கர்ப்பிணி பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு ராடு திணித்து கணவர் கொலை செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது.

காதல் திருமணம்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர், சகாரியா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப். இவரின் மனைவி ஹீராபாய். தம்பதிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு 4 வயதுடைய குழந்தை, 3 வயதுடைய குழந்தை, ஒன்றரை வயதுடைய 2 குழந்தை என 4 குழந்தைகள் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

விபத்து நாடகம்:

இதனிடையே, ஹீராபாய் தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தம்பதிகளுக்கு இடையே பல மாதங்களாக குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தம்பதிகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும், அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார்.

Crime news

சித்ரவதை மரணம்:

இந்த சம்பவத்தில் ஹீராபாய் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, பெண் கொடும் சித்ரவதையை அனுபவித்து மரணித்து அம்பலமானது. 

இரும்புக்கம்பி:

அதாவது, பெண்ணின் தலையில் கடுமையாக தாக்கிய காயம், தொடை மற்றும் உடல் பகுதியில் காயங்கள், பெண்ணின் பிறப்புறுப்பில் 27 செமீ நீளமுள்ள இரும்பு கம்பி ஆகியவையும் மருத்துவர்களால் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பெண் கணவரால் கடுமையாக துன்புறுத்தப்பட்டு உயிரிழந்துள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

இதனையடுத்து பெண்ணின் கணவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: என் மேல சந்தேகமா? தலைநசுங்கி உயிரிழந்த கணவன்.. மனைவி செய்த வெறித்தன சம்பவம்!