அதிமுக பிரமுகரின் வீடுபுகுந்து கத்திமுனையில் பயங்கரம்; 10 பேர் அதிரடி கைது.!

அதிமுக பிரமுகரின் வீடுபுகுந்து கத்திமுனையில் பயங்கரம்; 10 பேர் அதிரடி கைது.!



Pondicherry AIADMK Supporter Money Jewels Robbery

 

ரூ.38 இலட்சம் பணம், 82 சவரன் நகைகளை கொள்ளையடித்த 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெயின்போ நகரில் வசித்து வருபவர் கருணாநிதி (வயது 60). இவர் அதிமுக பிரமுகர் ஆவார். கடந்த 19 ம் தேதியன்று இரவு நேரத்தில் வீட்டுக்கு முன்பு நின்ற கருணாநிதியை சந்தித்து பேசிய 3 பேர், திடீரென கத்தி உட்பட பயங்கர ஆயுதங்களை காண்பித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவரை தாக்கி ரூ.38 இலட்சம் பணம், 82 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெரியக்கடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2 தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது. சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. 

Pondicherry

முதற்கட்ட விசாரணையில் பழைய குற்றவாளிகளின் கைவரிசை உறுதியாக, நேற்று அதிகாரிகள் 10 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.  விசாரணையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பணத்தை கூட்டாளிகளுடன் கொள்ளையடித்து சென்றது அம்பலமானது.