பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை.. காரை ஏற்றிக் கொலை செய்து கண்டுக்காமல் சென்ற டிரைவர்.!

பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை.. காரை ஏற்றிக் கொலை செய்து கண்டுக்காமல் சென்ற டிரைவர்.!



Parents beware! The child who was playing in front of the house.

பெங்களூரு பெல்லந்தூர் கசுவினஹள்ளியில் உள்ள சம்ரித்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ஜோக் ஜுடர் - அனிதா தம்பதியினர். இவர்களுக்கு அபினா என்று மூன்று வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தையானது கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது இரத்த காயங்களுடன் அலறி துடித்துள்ளது.

இதனையடுத்து குழந்தையின் அலரல் சத்தம் கேட்டு அங்கு ஓடி சென்று பார்த்த பெற்றோர் இரத்த காயங்களுடன் அலறி துடித்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்து தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை அர்பினா பரிதாபமாக உயிரிழந்தார்.

Parents beware

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பெல்லந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அர்பினா மீது சுமன் என்பவர் ஒட்டி வந்த காரானது ஏறி சென்றுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த குழந்தையை கார் ஓட்டுனர் சுமன் காப்பாற்ற முன்வராமல் காருடன் தப்பி சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து கார் ஓட்டுநர் சுமனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.