பப்ஜியில் திருமணம் தாண்டிய உறவு, பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த 4 குழந்தைகளின் தாய் .!

பப்ஜியில் திருமணம் தாண்டிய உறவு, பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த 4 குழந்தைகளின் தாய் .!



pakistan women illegal relationship with indian boy

பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர், உத்தர பிரதேசம்  மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஆன்லைனில் காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் கைது வரை சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானை சேர்ந்த அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், பாக்கிஸ்தான் பெண்ணான இவர் உத்தர பிரதேசம்  மாநிலத்தை சேர்ந்த சச்சின் என்ற 22 வயது இளைஞர் உடன் பப்ஜி விளையாடி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

மேலும் தனது நன்கு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு சட்ட விரோதமாக வந்துள்ளார். பின்னர், இவரும் இவரது ஆண் நண்பருமான சச்சின் இருவரும் நொய்டாவில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக தங்கியுள்ளனர்.

பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, சட்ட ஆலோசகரிடம் சென்றுள்ளார்கள். அவர் அளித்த தகவலின் படி அந்த பாக்கிஸ்தான் பெண், சச்சின் மற்றும் அவர்களுக்கு வீடு வடைக்கு கொடுத்த நபர் உட்பட போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.