கண்ணீர் விட்டு கதறி அழுத பாக். எம்.பி!! வைரலாகும் பாகிஸ்தான் வீடியோ.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா அதற்கு பதிலடியாக "ஆபரேஷன் சிந்தூர்" என்ற குறியீட்டில் ஒரு பெரும் தாக்குதலை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் இயங்கிய 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இதில் மூன்று முக்கிய தீவிரவாத அமைப்புகள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது; மொத்தம் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த தாக்குதல் தொடரும் என அவர் தெரிவித்ததன் பின்னர் பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது. பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தரப்பில் பேச்சுகள் உள்ளபோதிலும், நாட்டில் உள்ள சூழ்நிலை பதற்றமூட்டியுள்ளது.
இதையும் படிங்க: இதுதான் முதல் முறை!! முதல் தடவை இப்படி ஒரு சக்தியை கையில் எடுத்த இந்தியா!! வெற்றி நமக்குத்தான்!!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கதறி அழும் வீடியோ வைரல்:
இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி கண்ணீருடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர், “இந்தியா தொடர்ந்து தாக்கினால் பாகிஸ்தானின் நிலை என்னவாகும்?” என கதறி அழுதார்.
Pakistani MP broke down crying in their parliament, begging Allah to save his country. 😂 pic.twitter.com/8Hqye2hBOR
— Political Kida (@PoliticalKida) May 8, 2025
அதேபோன்று இன்னும் சில எம்பிக்களும் சோகத்தில் அழுததாக தகவல்கள் கூறுகின்றன. அந்த எம்பி, “இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானை அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்” என கடைசியாக கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.